தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பில்லை.. குட் நியூஸ் சொன்ன மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பில்லை. குரங்கு அம்மை தொற்றை மத்திய அரசு சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 1970 காலகட்டத்தில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு அதன் பின்னர் கட்டுக்குள் வந்தது. தற்போது பல்வேறு நாடுகளில் இந்த தொற்று மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 32 பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், அண்டை நாடுகளில் பரவியுள்ளதால் முன்னெச்சரிக்கை பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உடல் பலவீனம், வீங்கிய நிணநீர் முனைகள், தொண்டை புண், சொறி, காய்ச்சல், தசை வலி, முதுகு வலி ஆகியன குரங்கு அம்மையின் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே உடலில் தென்பத் தொடங்கிவிடும். குறிப்பாக காய்ச்சல், தொண்டை புண், தலைவலி முதலிலேயே தென்படத் தொடங்கிவிடும். தொற்று பரவியவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதன் மூலம் இந்நோய் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட உடனே முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் 4 வாரங்களில் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு விட முடியும் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை கண்காணிப்பு பணி தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், விமான நிலையங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. வெப்பநிலை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள்.
தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பில்லை. தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தானில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்படவுள்ளது. நோய்த் தொற்று குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு குரங்கம்மை நோய் தொற்றை சிறப்பாக கையாண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications