கேரளாவில் பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை - செங்கோட்டையன்
கேரளாவில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் திறக்கப்படாது.
சென்னை: கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
காரணம் பள்ளிகள், கல்லூரிகள் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக உள்ளன. இதனால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் தொலைக்காட்சிகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாலும் அது பற்றி எந்த முடிவும் தற்போது எடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.
கேரளாவில் பள்ளிகள் திறப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பத்தற்கான பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைவிட கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது என்றாலும் ஜனவரி மாதத்தில்தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறி வருகின்றனர் இந்த நிலையில் இங்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளைக் கூறினார். அப்போது அமைச்சரிடம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்று தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளில் 40 சதவிகிதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையத்தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என ஆசிரியர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தனியார் பள்ளியில் பணியிழந்த ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் அமைச்சர் செங்கோட்டையன்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications