ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு குடிமராத்து பணிகள் கண்காணிக்கப்படுகிறது.. பேரவையில் முதல்வர் தகவல்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என, முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, பொதுப்பணித்துறை மேற்கொள்ளக் கூடிய பணிகளின் தரத்தை சோதனை செய்ய தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.பொதுப்பணித்துறையில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனில் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்

பேரவையில் எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனின் கேள்விகளுக்கு பதிலளித்து தொடர்ந்து பேசிய முதல்வர், கிராமப்புற விவசாயிகள் மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில் எந்த சிபாரிசும், முறைகேடும் நடைபெறவில்லை.
ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு இத்திட்டப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ் தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன.
இந்த 39 ஆயிரம் ஏரிகளில் கடந்த 2016-17ம் ஆண்டில் 1,513 ஏரிகள் தூர்வார திட்டமிடப்பட்டு, இவற்றில் பெரும்பாலான ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
2017-18ம் ஆண்டில் 1,511 ஏரிகளை ரூ.328 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டு, சுமார் 1,406 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தற்போது 2019-20-ம் ஆண்டுகளில் 1,829 ஏரிகளை ரூ.498 கோடியில் தூர்வாரும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது என முதல்வர் பழனிசாமி தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications