தமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் இன்றுடன் முதல் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் அதேநேரம் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநாள் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அதேநேரம் வெயிலின் கொடுமையும் கடுமையாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. எனினும் இந்த கோடை மழை தமிழகத்துக்கு போதவில்லை.

Thermal wind will blow in many part of Tamil Nadu at next 3 days

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

அதேநேரம் வெப்பச்சலனம் காரணாக நாளை மறுநாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருத்தணியில் 107 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சி மற்றும் மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட்டும், நெல்லையில் 103 டிகிரி பாரன்ஹீட்டும், கோவையில் 97 டிகிரி பாரன்ஹீட்டும், தலைநகர் சென்னையில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+