தமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது?
சென்னை: தமிழகத்தின் இன்றுடன் முதல் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் அதேநேரம் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநாள் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அதேநேரம் வெயிலின் கொடுமையும் கடுமையாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. எனினும் இந்த கோடை மழை தமிழகத்துக்கு போதவில்லை.

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
அதேநேரம் வெப்பச்சலனம் காரணாக நாளை மறுநாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருத்தணியில் 107 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சி மற்றும் மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட்டும், நெல்லையில் 103 டிகிரி பாரன்ஹீட்டும், கோவையில் 97 டிகிரி பாரன்ஹீட்டும், தலைநகர் சென்னையில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications