Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணையை கட்ட சொன்னால் துணையை கட்டுகிறார்கள்.. சீண்டி பேசிய சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை என்றும், அணையை கட்ட சொன்னால் துணையை கட்டுகிறார்கள் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை. ஏதாவது பேசுகிறார்களா.. திமுக அரசு ஏதாவது பேசுகிறதா?.. ஏனென்றால் அவர்களது கூட்டணி கட்சி காங்கிரஸ்.. அவங்க தரமாட்டாங்க. ஏன் என்றால் காவிரி நீர் தான் அங்கே அரசியல். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது.

 They have no intention of getting Cauvery water - NTK chief Seeman

அதை வைத்து தான் அவர்கள் அங்கே அரசியல் செய்கிறார்கள். நீங்க கேட்டு பெறுவதற்கான எந்த இதுவும் இல்லை. என்ன பண்ண முடியும். நீங்கள் விவசாயி என்று நினைக்கிறீர்கள். கூட்டு குடிநீர் திட்டம் இருக்கிறதே.. சிவகங்கை ராமநாதபுரத்தில் காவிரியில் தண்ணீர் வந்தால் தான் இங்கேயும் குடிநீர் கிடைக்கும். அதனால் எல்லாருக்குமே பாதிப்பு தான். வேளாண் குடிமக்களுக்கு மட்டுமில்லை.

ஒரு தடுப்பணை கூட கிடையாது: எல்லாருக்கும் தான். காவிரியில் எங்களுக்கான உரிமை இருக்கிறதா இல்லையா. காவிரி எல்லாம் ஒரு பிரச்சினையா?.. கச்சத்தீவு எல்லாம் ஒரு பிரச்சினையா? என்று பேசினால் எப்படி?.. எனக்கு உரிமை இருக்கா இல்லையா? ஒரே நாடு என்று சொல்கிறீர்கள்.. ஒரே நாடு என்றால் அந்த நாட்டில் இருக்கும் எல்லா வளங்களும் எல்லாருக்கும் பொது தானே.. அப்படித்தானே இருக்க வேண்டும். எங்களுடைய வளங்கள் எல்லாமும் பொதுமையாத்தானே இருக்கிறது.

பெட்ரோல், அணு உலையில் தயாரிக்கப்படும் மின்சாரமாக இருக்கட்டும், பழுப்பு நிலக்கரியில் தயாரிக்கும் மின்சாரம் என எல்லாமே பொதுவாகத்தானே இருக்கிறது. அப்படி தான் எடுத்துக்கொண்டு போறீங்க.. ஆனால் உங்களுடைய நீர்வளம் என்றால் மட்டும் எப்படி?.. 133 கிலோ மிட்டர் தமிழகத்தில் காவிரி ஓடுகிறது. இதில் ஒரு தடுப்பணை கூட கிடையாது.

துணைகளை தான் கட்டுவோம்: 15 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை இருந்தால் போதும் என்கிறார்கள். ஆனால் சந்திரபாபு நாயுடு அவர்கள் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு 36 கி.மீ தான். ஆனால் நமக்கு 133 கிலோ மீட்டர் தூரம் இருந்தும் ஒரு தடுப்பணை தான் இருக்கிறது அதுவும் முன்பு கட்டியது தான்.. முதலில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும்.

நீரை தேக்க வேண்டும். நீரை தேக்கி அதனை வேளாண்மைக்கு பயன்படுத்த வேண்டும். குடிநீருக்கு பயன்படுத்த வேண்டும்.. நாங்க எப்படி அணைகளை கட்டுவோம்.. பல துணைகளை தான் கட்டுவோம்.. அது காமராஜர் ஆட்சியோடு முடிந்தது. என் நாடு என் மக்கள் என்று நேசிக்கிற தலைவராக இருந்ததால் நடந்தது. இவ்வாறு சீமான் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+