உயிர்பலியை தடுக்க சட்டம் கொண்டு வந்தால் தடுக்கிறார்கள்.. முற்றுப்புள்ளி வைப்போம் : முதல்வர் ஸ்டாலின்
சூதாட்டத்தாலும், நுழைவுத் தேர்வாலும் உயிர்கள் பலியாவதை தவிர்க்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை : வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், சென்னையில், கடந்த 8 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 'அகில இந்திய மாநாடு' நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், அரசியல் பிரமுகர்கள், தோழமை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முஸ்லீம் லீக் மாநாட்டில் ஸ்டாலின்
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், "சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வரக் காரணமாக உள்ளது. திமுகவுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான தொடர்பு என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல. பேரறிஞர் அண்ணாவையும், கருணாநிதியையும் இணைக்கப் பாலமாக இருந்தது இஸ்லாம்" என்று கூறினார்.

திமுக - இஸ்லாமியர் நட்புறவை பிரிக்க முடியாது
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கருணாநிதி. அதை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டார் கருணாநிதி. இஸ்லாமியர்கள் வேறு, தாம் வேறு என்று கருணாநிதி நினைத்தது இல்லை. திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது.

கிடப்பில் போடும் ஆளுநர்
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சாதாரண சட்டடத்திற்குக் கூட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. 4 மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டத்தை அனுப்பினால், அதை கிடப்பில் வைத்துவிட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார். பல்கலைக்கழக வேந்தர் சட்டம் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. இதுதான் ஆளுநர் செயல்படும் விதமா?

தடுக்கிறார்கள்
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள் உடனடியாக நிறைவேறிவிடும். சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் வேகமாக நிறைவேறும். நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்ப்பார்கள். இந்தியை திணிப்பார்கள். மாற்று மதத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரத்தை செய்வார்கள். ஆனால் சூதாட்டத்தாலும், நுழைவுத் தேர்வாலும் உயிர்கள் பலியாவதை தவிர்க்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள்.

ஓரணியில் திரள்வோம்
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேர்தலாக 2024ல் நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் அமையப்போகிறது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளீர்கள். விரைவில் அவர்கள் விடுதலை தொடர்பான மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும்." என்று பேசினார்.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications