திலகவதிக்கு தந்த அரசு வீட்டை வேற யாருக்கும் ஒதுக்கக்கூடாது: வீட்டுவசதி வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக்கூடாது என்று கோரி ஐபிஎஸ் முன்னாள் அதிகாரி திலகவதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீது, முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் முன்னாள் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என வீட்டு வசதி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிறந்தநாள்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு ஞானபீடம், சாகித்ய அகாடமி, தேசிய, மாநில மற்றும் சர்வதேச அளவில் இலக்கிய விருதுகள் பெற்றவர்களுக்கு, 'கனவு இல்லம்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, "கல்மரம்" என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1,409 சதுர அடி வீடு கடந்த 2022-ம் ஆண்டு, இந்த திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டது.. ஆனால், ஏற்கெனவே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாகக் கூறி, கனவு இல்லம் திட்டத்தின்கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீட்டை தமிழக அரசு 2024-ம் ஆண்டு ரத்து செய்துவிட்டது.
ஹைகோர்ட்டில் மனு: இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக்கூடாது என்று கோரியும் திலகவதி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "சொந்தமாக வீடு இருந்தாலும், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பெற, எழுத்தாளர்களுக்கு தகுதி உண்டு என, 2022 அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.. அதை மாற்றி, வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கனவு இல்லம்: வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பத்திரப்பதிவுக்காக காத்திருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து எனக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.. ஏற்கெனவே வீடு சொந்தமாக வைத்திருக்கும் சுந்தரமூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், மா.ராஜேந்திரன் ஆகியோருக்கு கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தன்னுடைய மனுவில் திலகவதி தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது... அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி, "அரசாணைகளில் முரண்பாடு உள்ளது. தமிழ் ஆர்வலர்களை கவுரவிக்கும் வகையில் அரசால் வழங்கப்படும் கனவு இல்ல திட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடக் கூடாது" என்று வாதிட்டார்.
வீட்டு வசதி வாரியம்: இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பிப்ரவரி 11ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டார். அதுவரை, ஏற்கனவே திலகவதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications