ஆர்எஸ்எஸ் சதி இது.. வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை விசாரிக்க வேண்டும்! - திருமாவளவன்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர் ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கியதாக சொல்லப்பட்ட நிலையில் தன்னுடைய வாகனத்தை அடையாளம் கண்டு வேண்டுமென்றே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் வம்பு இழுத்திருக்கிறார் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டு இருப்பதாவது, "உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி' என்பது தெரியவருகிறது.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்" என வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியிருந்தனர். இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றிருந்தார். போராட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பும் போது, திருமாவளவன் சென்ற கார் சென்னை ஐகோர்ட் அருகே, வழக்கறிஞர் ஒருவரின் பைக் மீது உரசியதாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து பைக்கில் சென்ற வழக்கறிஞர், திருமாவளவனின் கார் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக திருமாவளவன் ஆதரவாளர்கள் அந்த வழக்கறிஞர் இடையே சண்டையிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பேசி இருந்த திருமாவளவன், வேண்டுமென்றே தனது காரின் முன்பு அவரது பைக்கை நிறுத்தி விட்டு வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும், கைகளை ஓங்கியவாறு வந்தார் என்றும், இந்த சம்பவத்துக்கு பிறகு தனது ஆதரவாளர்கள் அவரிடம் பேசி அனுப்பி வைத்தார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். விசாரணையில் பைக்கில் வந்தவர் சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. சம்பவம் நடந்த பொழுது, விஷயம் தீவிரமாவதை உணர்ந்த போலீசார் ராஜீவ்காந்தியை உடனடியாக பார் கவுன்சில் கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சோசியல் மீடியாக்களில் வெளியாகியிருந்தது. அதில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, மெதுவாக சென்று ஓரிடத்தில் தனது பைக்கை நிறுத்துகிறார். பைக் மீது கார் மோதாமல் இருக்க திருமாவளவன் சென்ற கார், சற்று தள்ளி நிற்கிறது. பின்னர் ராஜீவ் காந்தி பைக்கில் இருந்து இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த வீடியோ ஸ்பெஷல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!











Click it and Unblock the Notifications