என் கணவர் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டாங்க? மாவீரனா? கொலைகாரனா? திருமாவை கேட்கும் சுவிதா யுவராஜ்.!
சென்னை: சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை பெற்ற தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரோலில் வந்த அவரை பல்வேறு சாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்தனர். இதற்கிடையே கொலைகாரனை மாவீரன் போல பேசுவதா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருந்த நிலையில், தனது கணவர் கொலைகாரன் இல்லை எனவும் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அப்படி பேசக்கூடாது எனக் கூறியிருக்கிறார் யுவராஜின் மனைவியான சுவிதா.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பட்டதாரி இளைஞரான கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் கோகுல்ராஜ் தலை உடைக்கப்பட்டு பற்கள் உடைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

காதல் விவகாரத்தில் கோகுல் ராஜை சங்ககிரி கருங்காலி மேடு பகுதியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களும் திரட்டப்பட்டது. வழக்கு விசாரணை மதுரை மாவட்ட தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில் யுவராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக யுவராஜ் சிறையில் இருக்கும் நிலையில் அவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள யுவராஜுக்கு ஒரு நாள் பரோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் யுவராஜ் கலந்து கொண்டார். அவரை பிரபல ரவுடியான ராக்கெட் ராஜா மற்றும் சில அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து பேசினர். தொடர்ந்து சிறைக்கு செல்வதற்கு முன்பதாக தனது ஆதரவாளர்களிடையே யுவராஜ் பேசினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் 'மாவீரா' என முழக்கமிட்டனர்.
தொடர்ந்து இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை ஹீரோ போல சித்தரிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கொலை குற்றவாளியை மாவீரன் என்பது போல பேசுவதா என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆணவப் படுகொலை செய்வது எல்லாம் ஒரு விசயமே இல்லை என்கிற தொனில தான் இந்தம்மா பேசுது, அவன் ஒரு கொடூர கொலைகாரன் என்கிற அறிவு கூட இல்லாமல் தான் இவங்க இப்படி பேசுறாங்களா.?
— கபிலன் (@_kabilans) March 17, 2025
நியாமாக தமிழக அரசு இந்த ஜாதி அமைப்பை தடை செய்யனும், எதுக்காக கொலைகாரனை சிறையில் இருக்கவனுடைய அமைப்பை எல்லாம்… pic.twitter.com/vMUfsUhqFj
இந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் யுவராஜின் மனைவியான சுவிதா. இது தொடர்பாக பேசியுள்ள அவர், "என் கணவர் ஏதோ ஜாதி நிகழ்ச்சிக்கோ, கடி நிகழ்ச்சிக்கோ வரவில்லை. தனது வீட்டில் நடைபெற்ற தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே வந்திருக்கிறார். அதை வைத்து தேவையில்லாமல் அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்களில் சிலரும் விமர்சித்து வருகின்றனர். எனது கணவர் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்.
தேவையில்லாமல் பேசுகிறார்கள். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. அதை பேசுவதை விட்டுவிட்டு எனது கணவரை விமர்சிக்கிறார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கும் போது அதைப் பற்றி பேசாமல், ஒரு அரசியல் தலைவர் எனது கணவர் குறித்து பேசி இருக்கிறார். அவர் மாவீரனா என கேட்டிருக்கிறார். முதலில் எனது கணவரை கொலையாளி எனக் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. நாங்கள் குற்றவாளி அல்ல நிரூபித்து அனைவரும் வெளியே வருவோம்" என பேசி இருக்கிறார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்












Click it and Unblock the Notifications