ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார்.. ஓ.பன்னீர்செல்வம் பரபர பேட்டி!
ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
திருவாரூர் தேர்தல் காரணமாக தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக உள்ளது. ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் எம்ஜிஆர்- அம்மா - தீபா பேரவை நிறுவனர் ஜெ. தீபா இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று செய்திகள் வந்தது. இதையடுத்து அடுத்த அதிரடியாக, தற்போது ஜெ. தீபா அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வருகிறது.
ஜெ. தீபா பேட்டி
காலையில் ஜெ. தீபா அளித்த இதுகுறித்து பேட்டியில், திருவாரூர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது பேரவை சார்பாகவும் யாரும் போட்டியிட போவதில்லை. நாங்கள் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவும் அளிக்க போவதில்லை.
அதிமுக விருப்பம்
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனி்ச்சாமி தலைமையிலான அதிமுக அணியில் இணைந்து செயல்பட எண்ணம் உள்ளது. அதிமுகவுடன் இணைவது தொடர்பாக தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும். அதன் பிறகு இணைவது குறித்து முடிவு எடுக்கப்படும். அனைவரின் கருத்தும் அதுவாகவே இருக்கும், என்று கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் பதில்
இந்த நிலையில் ஜெ.தீபாவின் கருத்து குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கருத்து தெரிவித்தார். அதில் ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார். ஜெ.தீபா கட்சியில் இணைய விரும்பினால் சேர்த்துக் கொள்வோம். ஜெ.தீபா உட்பட யார் கட்சியில் இணையம் விருப்பம் தெரிவித்தாலும் சேர்த்துக் கொள்வோம்.
திருவாரூர் வேட்பாளர்
அதிமுகவிற்கு யார் வந்தாலும் இணைத்துக்கொள்வோம். திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பெயர் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் மிகவும் வலுவான வேட்பாளரை களமிறக்க போகிறோம், என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.