திருவாரூர் இடைத் தேர்தலில் திருப்பம்.. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்.. பூண்டி கலைவாணன் விருப்பமனு
Recommended Video
சென்னை: திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான திமுக வேட்பாளர் தேர்வு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார், அம்மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைராஜன்.
திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் எழுந்துள்ளது.
கருணாநிதி எம்எல்ஏவாக பதவி வகித்த தொகுதி என்பதால், அங்கு யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறார்கள் என்ற ஆர்வம் இயல்பாக உள்ளது. ஸ்டாலினே அதில் வேட்பாளராக களமிறங்கப்போகிறார் என்ற தகவல் அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் தீனி போட்டுள்ளது.
ஸ்டாலினுடன் ஆலோசனை
இந்த நிலையைில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வதற்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் ஆலோசிக்க திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் இன்று அறிவாலயம் வந்தார். அவரும் விருப்ப மனு தாக்கல் செய்ய கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஸ்டாலின் பெயரில், பூண்டி கலைவாணனால் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின் போட்டி
ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று, பூண்டி கலைவாணன், விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதைத்தான், பூண்டி கலைவாணன் விரும்புவது உறுதியாகியுள்ளது.
பேட்டி
இதுகுறித்து பூண்டி கலைவாணனன் நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அங்கே ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வந்தனர்.
விருப்ப மனு
மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு அளிக்க விரும்பினர். எனவே நான் அவர் பெயரில் விருப்ப மனு அளித்துள்ளேன். இவ்வாறு பூண்டி கலைவாணனன் கூறினார். 4ம் தேதியான நாளை திமுக வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.