Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழ்க்கையில் இதை ஒருமுறை மட்டும்தான் பார்க்க முடியும்! வேலூர் கொடுக்கும் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த மாதம் முழுவதும் 4 கோள்களை வானத்தில் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதை தவறவிட்டுவிட்டால் மீண்டும் பார்ப்பது சாத்தியமில்லாதது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேலூரில் ஒளி மாசு குறைவாக இருப்பதால் சென்னை மக்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

விண்வெளி அதிசயம் நிறைந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு அதிசயத்தை நம்முன்னே நிகழ்த்தும். அந்த வகையில், இந்த மாதம் வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை நம்மால் வெறும் கண்களில் பார்க்க முடியும்.

planets space

இவையெல்லாம் பூமியிலிருந்து சில கோடி கி.மீ தொலைவில் இருக்கின்றன. வெள்ளி கிரகத்தை எடுத்துக்கொண்டால், சூரிய குடும்பத்தில் மிகவும் சூடான கிரகம் இதுதான். என்னதான் சூரியனிலிருந்து 2வதாக இது இருந்தாலும், இந்த கிரகத்திற்கு என அடர்த்தியான வளிமண்டலம் இருக்கிறது.

எனவே உள்ளே வரும் வெப்பத்தை இது தனக்கு அப்படியே பிடித்து வைத்துக்கொள்கிறது. இதனால்தான் மிகவும் சூடான கிரகமாக இது அறியப்படுகிறது.

அடுத்து செவ்வாய் கிரகத்தை எடுத்துக்கொண்டால், ஒரு காலத்தில் அங்கு தண்ணீர் இருந்தாகவும், அதில் உயிர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை ஆய்வு செய்ய நாம் விண்கலனை அனுப்பி வைத்திருக்கிறோம்.

இதனையடுத்து வியாழன் கிரகத்தை எடுத்துக்கொண்டால், இதுதான் சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள். முழுக்க முழுக்க வாயுக்களால் ஆன இந்த கிரகமானது, ஒரு தோல்லியடைந்த சூரியன் என்று அழைக்கப்படுகிறது. மட்டுமல்லாது பூமியை தாக்க வாய்ப்பு இருக்கும் விண்கற்களை இந்த கோள் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. எனவே பூமியின் செக்யூரிட்டி கார்டாகவும் இருக்கிறது.

சனி கிரகத்தை பொறுத்தவரை, மிகவும் அழகான கிரகமாக இது இருக்கிறது. இதுவும் வாயு கோள்தான். சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கோளாக இது இருக்கிறது. இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் வருவது என்பது ஆச்சரியமான ஒன்று. இந்த சம்பவம் இந்த மாதம் முழுவதும் நடக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவற்றை வெறும் கண்களால் நம்மால் பார்க்க முடியும். ஒளி மாசு குறைவாக இருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் இதை தெளிவாக பார்க்கலாம். சென்னையில் இருந்து பார்த்தாலும் இது தெரியும். ஆனால் தெளிவாக பார்க்க வேண்டும் எனில் வேலூருக்கு வர வேண்டும்.

வேலூரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் திருப்பத்தூரில் வைனு பாப்பு விண்நோக்ககம் அமைந்திருந்திருக்கிறது. இங்கு ஒளிமாசு குறைவாக இருப்பதால் அங்கிருந்து பார்த்தால் 4 கோள்களை தெளிவாக பார்க்க முடியும். குறிப்பாக இன்று வெள்ளியும், சனியும் வழக்கத்தை விட மிகவும் நெருக்கமாக தோன்றும். அதேபோல உங்கள் கண்கள் 30 நிமிடங்களுக்கு இருட்டில் பழகிவிட்டால் உங்களால் இதை சிறப்பா பார்க்க முடியும்.

அதேபோல இம்மாத இறுதியில் உங்களால் யுரேனஸ் மற்றும் நெப்டியுனையும் பார்க்க முடியும். ஆனால் அவை வெறும் கண்களில் தெரியாது. சிறிய தொலை நொக்கி வைத்திருந்தால் அதை பார்க்க முடியும். அனைத்து கோள்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பது வாழ்க்கையில் அரிய வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+