Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பு கொண்ட இந்த வேர்… 3 மாதத்தில் வழுக்கை தலையில் மாற்றம் தருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கை நமக்கு தந்த அற்புதங்களில் ஒன்றுதான் அதிமதுரம்.. "அதி-மதுரம்" என்ற பெயரிலேயே அதன் இனிப்பு சுவை அடங்கியிருக்கிறது.. சர்க்கரை நோயாளிகள் கூட செயற்கை இனிப்புகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் அளவுக்கு இது பாதுகாப்பானது.. இந்த அதிமதுரம் மூலிகை பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்.

இன்றைய அவசர தொழில் நுட்ப உலகில் பல பேர் சந்திக்கும் சுவாசப் பிரச்சினைகளான நெஞ்சு சளி, இருமல் மற்றும் வறட்டு இருமலுக்கு அதிமதுரம் ஒரு சிறந்த தீர்வாகும்.. குழந்தைகளுக்கு சளி இருந்தால் வெதுவெதுப்பான நீரில் அதிமதுரப் பொடி மற்றும் சிறிது தேன் கலந்து கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

{image-collage-down-1715000252-1-jpg-1774187855310_1774187732422-600x338.jpg tamil.oneindia.com

பெரியவர்கள் இதனை தேநீராகவோ அல்லது நேரடியாக வெந்நீரில் கலந்தோ குடிக்கலாம்.. சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் சோம்பு சிறிது எடுத்து கொதிக்க வைத்த நீரில் இந்தப் பொடியைச் சேர்த்து அருந்தலாம்..பெண்களின் ஆரோக்கியத்தில் அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.. குறிப்பாக, கருப்பை தொடர்பான நோய்களை குணப்படுத்துவதோடு மலட்டுத்தன்மை நீங்கவும் இது உதவுகிறது.

அதிமதுரம் மற்றும் திராட்சையைச் சம அளவில் பொடி செய்து, மாதவிடாய் தொடங்கிய முதல் 5 நாட்கள் பாலில் கலந்து குடித்து வந்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும் தாய்மார்கள் இதனைப் பாலில் கலந்து அருந்தும்போது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தும் மேம்படும்.

மேலும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலி மற்றும் கை, கால் குடைச்சலுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்..சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிலும் இதன் பங்கு அளப்பரியது.. அதிமதுரத்தில் உள்ள ஃபிளவனாய்டுகள் கூந்தலின் வேர்க்கால்களை உறுதிப்படுத்துகின்றன.

இளநரை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அதிமதுரப் பொடியைப் பசும்பாலில் ஊறவைத்துத் தலையில் மசாஜ் செய்து குளித்தால் நரை மறையத் தொடங்கும்.. வழுக்கை விழுந்த இடங்களில் எருமைப்பால் விட்டு அரைத்த அதிமதுர விழுதைத் தடவி வரலாம்.. முடி உதிர்வைத் தடுக்க அதிமதுரம் மற்றும் நெல்லிக்காயைக் கடுகு எண்ணெயுடன் கலந்து ஹேர்பேக் ஆகப் பயன்படுத்தலாம்.. இது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்..செரிமான மண்டலத்தைப் பாதுகாப்பதில் அதிமதுரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது வயிற்றுப் புண்களை ஆற்றுவதுடன் மலக்கட்டையும் நீக்குகிறது.. கெட்ட கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தைப் போக்கி மன அமைதி தரவும் இது வல்லது.

அதுமட்டுமல்ல, பார்வைத்திறனை மேம்படுத்தவும், செல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் அதிமதுரம் பெரிதும் உதவுகிறது.. புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட நினைப்பவர்கள் அந்த எண்ணம் தோன்றும் போதெல்லாம் அதிமதுரத்தைச் சுவைக்கலாம்..

மூலிகை மருத்துவத்தில் அதிமதுரம் என்பது நோய்களை தீர்க்கும் அற்புதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. இருப்பினும், இதனைச் சூரணங்களாகவோ அல்லது மருந்தாகவோ நீண்ட காலம் உட்கொள்ளும் போது தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும். முறையான பயன்பாடு மட்டுமே முழுமையான பலனைத் தரும்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதால், இதுபோன்ற இயற்கை மூலிகைகளை நம் அன்றாட வாழ்வில் இணைத்துக் கொள்வது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+