கோவில் கோபுரம் பற்றிய பேச்சு.. உரை வீச்சில் தெறித்த சொல்.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்
Recommended Video
சென்னை: இந்துக் கோவில் கோபுரங்களில் அசிங்கமான பொம்மைகள் இருப்பதாக தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான, தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் மகளிர் மாநாடு நடைபெற்றது. அதில் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார்.
அவ்வாறு திருமாவளவன், உரையாற்றியபோது அயோத்தி விவகாரம் தொடர்பாகவும், பேசினார். அப்போதுதான், இந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வழிபாட்டு தலம் வகைகள்
திருமாவளவன் பேசுகையில், மத வழிபாட்டுத் தல, கோபுரத்தை வைத்துதான் அது எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத்தலம் என்று அறிந்து கொள்ள முடியுமே தவிர, அடித்தளத்தை வைத்து கிடையாது என்று தெரிவித்தார். அப்போது இந்து கோவில் கோபுரங்களில், அசிங்கமான பொம்மைகள் இருக்கும். இதை வைத்து அது இந்து மத கோவில் கோபுரம் என்று அறிந்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாஜக கேள்வி
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்துக்களின் வாக்குகள் வேண்டாம் என்று திருமாவளவன் அறிவிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளது.
— Thol.Thirumavalavan (@thirumaofficial) November 14, 2019 |
விளக்கம்
முன்னதாக திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் மகளிர் மாநாட்டில் ஆற்றிய உரையில் ஒரு சில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது போல உள்ளது என்று நண்பர் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட சிலர் என்னிடம் கூறினார்.

உண்மை உண்டு
அவை, உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும் அதற்காக நான் வருந்துகிறேன். ஒரு மணி நேரத்துக்கும் மேல் நான் ஆற்றிய உரையில் பத்து நொடிகள் இடம்பெற்றுள்ள ஓரிரு சொற்களை மட்டுமே வெட்டி எடுத்து சிலர் பரப்புகின்றனர்.

பாஜகவுக்கு எதிராக
எஞ்சிய உரை முழுவதும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல் ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல், இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனிடையே திருமாவளவன் வருத்தம் தெரிவித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன் வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications