எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள்.. அமைச்சர் வேலுமணி ஆதங்கம்
கஜா புயல் பாதிப்பு பணியில் எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆதங்கம் தெரிவித்தார்.
சென்னை: கஜா புயல் பாதிப்பு பணியில் எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆதங்கம் தெரிவித்தார்.
கடந்த 16-ம் தேதி தமிழகத்தில் கஜா புயல் கரையைக் கடந்தது. இதில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

பல ஏக்கரிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. கஜா புயலில் சிக்கி 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கண் முன்னே விவசாயம் நாசமானதை கண்டு, மனம் வெதும்பி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்வுகளும் நடந்தன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் என பலர் உதவிகளை வழங்கி வருகிறார்கள். இருப்பினும், இன்னும் பல கிராமங்களுக்கு மின்சாரம், குடிநீர் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் பலர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், மின்சார சீரமைப்பு பணிகளுக்கு 200 கோடி ஒதுக்கிய நிலையில், இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி பேசியதாவது : புயல் பாதிப்பு பணியில் எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மீறி புயலின் வேகம் கடுமையாக இருந்தது.
முதல்நாள் கோபமாக இருந்த மக்கள் அமைச்சர்கள் அதிகாரிகளின் பணியால் அன்பை பொழிந்தனர் என்று கூறினார். நாட்டிலேயே குழாய் மூலம் குடிநீர் 99 சதவீதம் வழங்குவது தமிழகம் தான் என்றும், கஜா புயலின்போது ஊராட்சி துறை ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியதால், மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர் எனவும் கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications