தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு கொரோனா 'இத்தனை மடங்கு' அதிகரிக்கலாம்! சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு கொரோனாவின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவும் மாநிலங்களில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கொரோனா பரவல் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வேகம் எடுக்கிறது. புத்தாண்டுக்குப் பிறகு கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது அதிரடியாக பரவி வருகிறது. அதோடு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒமிக்ரானும் பரவி வருகிறது. மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், கேரளா மற்றும் குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனாவின் வேகம் அதிகரித்திருக்கிறது. இதனால் இந்த மாநிலங்களின் நிலை கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் சூழலில், கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகளவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா
தமிழ்நாட்டிலும் நேற்று கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 'தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,54,935 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 17,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது.

பொங்கல்
கொரோனா அதிகரித்துவரும் நிலையில், பொங்கல் பண்டிகை வருகிறது. சென்னையில் கொரோனா அதிகரித்துள்ளது. இங்கிருந்து சொந்த ஊருக்கு நிறைய பேர் பஸ், ட்ரெயின் என செல்கிறார்கள். இவர்களால் கொரோனா அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

விழா நேரம்
விழா நேரத்தில் தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், கொரோனா முன்பு இருந்ததைவிடவும் அதிகரிக்கும். தமிழகத்தில் கொரோனா பொங்கலுக்குப் பிறகு மூன்று மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இரண்டாவது அலையைவிட மூன்றாவது அலையில் நிறைய பேருக்கு தொற்று ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications