சசிகலா ஆதரவு போஸ்டர்கள்... மேலும் 3 நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக அதிமுகவில் இருந்து மேலும் மூன்று பேர் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா, கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிந்து, விடுதலை ஆகும் நாள் நெருங்கும்போது, அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின், கொரோனாவில் இருந்து குணமடைந்த சசிகலா, கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட சசிகலாவை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சில அதிமுக நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டினர்.
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி தேனி, திருச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னராஜா, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தின் சாமிநாதன், மயிலாடுதுறையின் குத்புதின் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர்,
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications