டாஸ்மாக்கில் செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றம்...சிக்கும் மாஜிக்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன்?
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக கூறப்படும் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோரது பெயர்கள் அடிபடுவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதியன்று ரூ500, ரூ1,000 நோட்டுகள் இனி செல்லாது என திடீரென அறிவித்தார் பிரதமர் மோடி. இதனையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் பொதுமக்கள் கியூவில் நிற்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. அப்போது வங்கி கணக்கில் பணம் எடுக்க ஏ.டி.எம்.மையங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் சொந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் பல மணிநேரம் கியூவில் நின்று பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த களேபரத்தில் சிக்கி பலரும் மாண்டுபோயினர். நாட்டில் அப்போது அசாதாரண நிலை போன்ற சூழல் நிலவியது. பின்னர் புதியதாக ரூ2,000, ரூ500, ரூ100 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சட்டவிரோத பண பரிமாற்றம்
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட காலத்தில் அவற்றை வாங்க வேண்டாம் என தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை மீறியும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் புதிய ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் மதுபான கடைகள் மூலமாக மாற்றியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ62 கோடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதாக தகவல்களைப் பெற்றுள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல்
இத்தகைய சட்டவிரோத பணப் பரிமாற்றம் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் நடைபெற்றதும் தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையை வருமான வரித்துறை தூசு தட்டி உள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்திடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தது வருமான வரித்துறை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதித்துவிடக் கூடாது என்பதற்காக செல்லாத ரூபாய் நோட்டுகளைப் பெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாஜி அமைச்சர்கள் மூவருக்கு சிக்கல்?
அப்போது மதுவிலக்கு ஆயத் தீர்வை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அத்துடன் திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி.சம்பத் ஆகியோர் அமைச்சர்களாகவும் இருந்தனர். இந்த மூவருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். இதுதான் இப்போது கோட்டை வட்டாரங்களில் ஹாட் டாப்பிக்காகவும் பேசப்பட்டு வருகிறது.

கலக்கத்தில் மாஜி அதிமுக அமைச்சர்கள்
திமுக ஆட்சிக்கு வந்தது முதலே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் என பலரது மீதான வழக்குகளில் சோதனைகளும் விசாரணைகளும் சூடுபிடித்துள்ளன. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களா கொலை, கொள்ளை வழக்கில் மாஜி முதல்வ்ர் எடப்பாடி பழனிசாமி சிக்குவார் எனவும் கூறப்படுகிறது. குட்கா லஞ்ச ஊழல் வழக்கில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், ரமண சிக்கியுள்ளனர். தமிழக மின்சார வாரிய அனல்மின் நிலையங்களில் நிலக்கரி மாயமான விவகாரத்திலும் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்த வரிசையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் கொத்தாக மாஜி அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி.சம்பத் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. இந்த வழக்கையும் லஞ்ச ஒழிப்புத்துறை கையில் எடுக்கப் போகிறதாம். இதனால் அதிமுக மாஜி அமைச்சர்கள் பலரும் கலக்கத்தில் இருக்கின்றனராம்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications