திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் நவீன் பொல்லினேனி தற்கொலை
சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் மேலாளர் நவீன் பொல்லினேனி சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலா பால் நிறுவனத்தின் மேலாலர் நவீன் பொல்லினேனி. 37 வயதான நவீன் திருமலா பால் நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ரூ. 44.5 கோடியை நிறுவனத்தில் இருந்து கையாடல் செய்யததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையடுத்து, கையாடல் செய்த தொகையை திருப்பி அளிப்பதாக எழுத்துப் பூர்வமாக கடிதம் ஒன்றை நவீன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம்தாழ்ந்தி வந்த நிலையில், திருமலா பால் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் நவீனை தொடர்பு கொண்டு பணம் குறித்து கேட்டுள்ளனர். பணத்தை திருப்பிச் செலுத்தாவிடில் சிறைக்கு அனுப்பும் நிலை ஏற்படும் என்று கூறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மேலாளர் நவீன் பொல்லினேனி சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கை சென்னை குளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், அவர் சமீபத்தில் விடுப்பில் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் போலீஸார் இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications