ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரமோற்சவம்.. தமிழக பக்தர்கள் பயணிக்க ஸ்பெஷல் பஸ்.. இன்று முதல் ரெடி
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் 15ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணத்தில் இருந்து, திருப்பதிக்கு வழக்கமாக செல்லும், 52 விரைவு பேருந்துகளுடன், 48 சிறப்பு பேருந்துகளை இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 15 முதல் 23ஆம் தேதி வரைக்கும் நடைபெற உள்ளது.

அக்டோபர் 15 ஞாயிறு - பெரிய சேஷ வாகனம்
அக்டோபர் 16 திங்கள் சின்ன சேஷ வாகனம் ஹம்ச வாகனம்
அக்டோபர் 17 செவ்வாய் சிம்ம வாகனம் முத்துப்பந்தல் வாகனம்
அக்டோபர் 18 புதன் கற்ப விருட்ச வாகனம் சர்வ பூபால வாகனம்
அக்டோபர் 19 வியாழன் மோகினி அலங்காரம் கருட சேவை
அக்டோபர் 20 வெள்ளி அனுமந்த வாகனம் புஷ்பக விமானம், கஜ வாகனம்
அக்டோபர் 21 சனி சூர்ய பிரபை வாகனம் சந்திர பிரபை வாகனம்
அக்டோபர் 22 ஞாயிறு தங்க ரத ஊர்வலம் அஸ்வ வாகனம்
அக்டோபர் 23 திங்கள் சக்ர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைய உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து இன்று முதல் 26ஆம் தேதி வரை, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணத்தில் இருந்து, திருப்பதிக்கு வழக்கமாக செல்லும், 52 விரைவு பேருந்துகளுடன், 48 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. பயணியரின் தேவைக்கு ஏற்றார் போல, விரைவு பேருந்துகளை அதிகரித்து இயக்க உள்ளோம். பயணியர், www.tnstc.in என்ற இணையதளம் மற்றும், tnstc official செயலி மூலம், முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திருமலையில் குவிந்து வருகின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆகிறது
பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த இன்று 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருப்பதியில் விநியோகம் செய்யப்படும் சர்வ தரிசன டோக்கன்களை நிறுத்தி வைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications