பிரபல விஐபி.. 55 பேரா? தலைசுற்ற வைத்த திருப்பூர் சத்யா.. சிக்கியதா வீடியோ? சென்னை கோர்ட் பரபர உத்தரவு
சென்னை: திருப்பூர் சத்யா வழக்கில் இன்று பரபரப்பு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.. அத்துடன் சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வியையும் போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்..
கொடிமுடியை சேர்ந்த 30 வயது பெண் சத்யா.. திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.. எனினும், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி, திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து ஏமாற்றி பணம், நகை மோசடி செய்து வந்துள்ளார்.

அந்தவகையில், தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர், சத்யாவின் வலையில் விழுந்தார்.. திருமணத்துக்காக மேட்ரிமோனியலில் பதிவு செய்தபோது, சத்யாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவருடன் பேசி தன்னை நெருக்கமாகி கொண்டார் சத்யா. இதனால் சத்யாவை மிகவும் பிடித்துப்போய்விட்டதால், அவரையே திருமணம் செய்யவும் முடிவெத்தார் பேக்கரி ஓனர்.
திருமண மோசடி: திருமணமான ஒருசில நாட்களில், சத்யா பெயரை ரேஷன் அட்டையில் பதிவதற்காக முனைந்தபோதுதான், "கணவர்" என்ற இடத்தில் வேறொருவர் பெயர் இருப்பதை கண்டு பேக்கரி ஓனர் அதிர்ந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், சத்யா குறித்து கொடிமுடிக்கே நேரடியாக சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறித்து வந்தது தெரியவந்தது.
ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத இளைஞர்கள், தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் என 55 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கில் இவர்களிடம் நகை, பணத்தை சத்யா பறித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
மகளிர் போலீஸ்: இதையடுத்து, தாராபுரம் மகளிர் போலீசில் பேக்கரி ஓனர் புகார் தரப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த சத்யாவை போலீசார் கைது செய்தனர்.. விசாரணையும் மேற்கொண்டனர்.
அப்போது போலீஸ் தரப்பில் இதுகுறித்து சொல்லும்போது, "மேட்ரிமோனியில் பெண் தேடி வரும் ஆண்களின் செல்போன் நம்பருக்கு பேசி அவர்களை தனிமையில் சந்திப்பாராம். பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாகவும் இருப்பாராம். இதை ரகசியமாக வீடியோ எடுத்து, பணம், நகை கேட்டு அவர்களை மிரட்டுவாராம். இது தொடர்பாக போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது என்கிறார்கள்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் சத்யா.. இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற கூறி ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்ச்செல்வி: ஆனால், சத்யாவுடன் நிழல்போல ஒட்டிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வி என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். ஏனென்றால், பேக்கரி ஓனர் மகேஷூக்கும், சத்யாவுக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததே இந்த தமிழ்ச்செல்விதானாம்..
இவர் சத்யாவின் உறவினர் என்றும் சொல்கிறார்கள். இவரை பிடித்து விசாரித்தால்தான், சத்யாவால் எத்தனை ஆண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்? நகை, பணம் குறித்த விவரம் தெரியவரும் என்பதால், தமிழ்ச்செல்வியையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில், தனக்கு முன்ஜாமீன் கோரி, தமிழ்செல்வி ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தலைமறைவாக இருந்த சத்யாவை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, பிறகு திருப்பூர் சிறைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.. அப்போது போலீஸ் ஜீப்பில் ஏறும்போது போலீசாரை பார்த்து சத்யா, "சார்.. என்கிட்ட இருக்கும் ஆதாரத்தையெல்லாம் காட்டுறேன்.. உங்களிடம் விளக்குகிறேன்.. ஆனால், தயவுசெய்து என்னுடைய குடும்பத்தை அசிங்கப்படுத்தாதீங்க" என்று அழுதுகொண்டே சொன்னார். அதற்கு போலீசார், அப்படியெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம் என்று சத்யாவுக்கு உறுதி தந்திருந்தது நினைவுகூரத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications