“2034 தொகுதிகளில் வெல்வோம்..” உளறி கொட்டிய திருத்தணி தவெக வேட்பாளர் என்ன ஆனார்? நிலவரம் இதுதான்
சென்னை: திருத்தணி சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக சத்யகுமார் களமிறங்கியிருந்தார். அவர் பிரச்சாரத்தின்போது செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில், தவெக 2034 தொகுதிகளில் வெற்றிப் பெறும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருத்தணி தொகுதியில் மொத்தம் 2,61,857 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 2021-ம் ஆண்டு தேர்தலில் இங்கு 2,90,624 வாக்காளர்கள் இருந்தனர், ஆனால் தற்போதைய தரவுகளின்படி சுமார் 2.61 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். இந்தத் தேர்தலில் திருத்தணி தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதிமுக சார்பில் ஜி.ஹரி, தேமுதிக சார்பில் டி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் போட்டியிட்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருத்தணியில் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது. அதிமுக வேட்பாளர் ஜி. ஹரி தற்போது 18,548 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் எம். சத்யகுமார் 17,012 வாக்குகள் பெற்று மிக நெருக்கமான போட்டியை அளித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் சுமார் 1,536 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருத்தணி தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக-வின் எஸ். சந்திரன் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், இந்த முறை அதிமுக மற்றும் தவெக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதல் தேர்தலிலேயே இங்குத் தனது பலத்தை நிரூபித்து ஆளுங்கட்சியான திமுக-வை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
தபால் வாக்குகள் மற்றும் தொடக்க காலச் சுற்றுகளில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தாலும், தவெக வேட்பாளர் சத்ய குமார் மிகக் குறைந்த இடைவெளியில் பின்தொடர்வதால் இறுதி முடிவு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications