தீவிர பிரசாரம்... நடிகர் கார்த்திக் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதி- கொரோனா 'நெகட்டிவ்'
சென்னை: மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும் நடிகருமான கார்த்திக் திடீர் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

சட்டசபை தேர்தல் களமானது அனல் பறக்கும் நிலையில் திடீரென நடிகர் கார்த்திக் பிரசாரத்துக்கு வந்தார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்புவுக்கு கார்த்திக் பிரசாரம் செய்தார்.

அத்துடன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ராஜ்யசபா எம்.பி. பதவியை விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில் தாம் எந்த கட்சி, கூட்டணிக்கும் ஆதரவு இல்லை என்றார் நடிகர் கார்த்திக்.

இந்த நிலையில் இன்று திடீரெனன்று கார்த்திக்குக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கு கார்த்திக்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பல்வேறு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இதில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் கார்த்திக் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications