'வாசன் ஐ கேர்' குழுமத்தின் தலைவர் அருண் மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்- பாஜக
சென்னை: 'வாசன் ஐ கேர்' குழுமத்தின் தலைவர் அருண் மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
வாசன் ஐ கேர் நிறுவனம் திருச்சியை மையமாக கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது 170-க்கும் மேற்பட்ட இடங்களில் வாசன் ஐ கேர் செயல்பட்டு வருகிறது.
வாசன் ஐ கேர் நிறுவன தலைவர் அருண் திடீரென நேற்று மாரடைப்பால் காலமானார். ஏற்கனவே வருமான வரி சோதனை, அமலாக்கப் பிரிவு சோதனைகளில் அருணும் சிக்கியிருந்ததால் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
வாசன் ஐ கேர் குழும தலைவர் அருண் உயிரிழப்பை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த சென்னை போலீஸ்
சென்னை போலீசாரும் அருண் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளதாவது:
'வாசன் ஐ கேர்' குழுமத்தின் தலைவர் அவர்களின் மரணம் குறித்து விசாரணை தேவை என அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கிறனர். தமிழக அரசு உடன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
— Narayanan Thirupathy (@Narayanan3) November 17, 2020
'வாசன் ஐ கேர்' குழுமத்தின் தலைவர் அவர்களின் மரணம் குறித்து விசாரணை தேவை என அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசு உடன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நாராயணன் திருப்பதி பதிவிட்டிருக்கிறார்.