அசத்தல் அறிவிப்பு.. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி பயிலும் மாணவிகளுக்கும் புதுமை பெண் திட்டம்
சென்னை: புதுமை பெண் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்த இந்த ஆண்டு ரூ. 370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கடந்த 15-ந் தேதி சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர், காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்ற திருக்குறள் போல, நமது ஆட்சி நடந்து வருகிறது எனக்கூறி பட்ஜெட் உரையை தொடங்கினார். தொடர்ந்து மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் இனி அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இது தொடர்பாக தங்கம் தென்னரசு கூறியதாவது:- காலத்திற்கு ஏற்ப அரசு நல நலத்திட்டங்களை மாற்றி தகவமைத்து கொள்வது மிகச்சிறந்த அரசின் செயல்பாடு ஆகும். அந்த வகையில் ஏழை குடும்பங்களை சேர்ந்த மகளிர் உயர் கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் அறிமுகப்டுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமை பெண் திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று பயன் அடைந்து வருகிறார்கள்.
இத்திட்டம் அறிமுகம் செய்த பின்னர் உயர் கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 34 சதவிகிதம் அதிகரித்து கூடுதலாக 34 ஆயிரத்து 460 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இத்தகைய சிறப்புகளை கொண்ட புதுமை பெண் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்த இந்த ஆண்டு ரூ. 370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications