Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படித்தான் சட்டப்பேரவையை நடத்தனுமா? ஆளுநரை அவமதிப்பதுதான் திராவிட மாடலா? எல் முருகன் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை அருகில் வைத்து கொண்டு அமைச்சர் போல எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்பது போல செய்கிறார் எனவும், தேசிய கீதத்தை புறக்கணித்து, ஆளுநரை அவமதிப்பது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா...? என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தான் தொடங்கும். இதன்படி நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநரின் உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்க மறுத்துவிட்டார்.

 TN Budget Session Insulting the governor is Dravida model rule? Union Minister L Murugan

உரையை வாசிக்க மறுத்ததற்கு அவர் இரண்டு காரணங்கள் சொல்லியிருந்தார். ஒன்று, ஆளுநர் உரை என்பது அரசின் பாலிசி உரை தான். இதை அரசு தான் தயார் செய்து கொடுக்கும்.. அதை ஆளுநர் வாசிக்க மட்டுமே செய்வார். ஆனால், தமிழக அரசின் உரையில் உள்ள சில கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் எனவே இதை வாசித்தால் அரசியல் சாசன பதவியை கேலிக்குள்ளாக்குவதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

இதேபோல் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ரவி தெரிவித்தார். அதாவது தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் எனத் தான் குறிப்பிட்டதாகவும் இருப்பினும் தொடக்கத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் விடுவது இதுவே முதல்முறை.

இதன் பின்னர் ஆளுநர் ரவி படிக்காமல் விட்ட உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது ஆளுநர் ரவி சட்டசபையில் தான் இருந்தார். ஆளுநர் வாசிக்க மறுத்த உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்து நிறைவு செய்தார். தொடர்ந்து சட்டசபையில் ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ரவி புறக்கணித்த உரை சட்டசபையில் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆளுநர் பேசிய சில வார்த்தைகள் உரையில் இல்லாத சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்த நிலையில், ஆளுநரை விமர்சித்தது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தமிழக அரசை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் எல் முருகன் கூறியிருப்பதாவது:-

 TN Budget Session Insulting the governor is Dravida model rule? Union Minister L Murugan

மீண்டும் மீண்டும் - தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..! தமிழ்நாடு சட்டபேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள் மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார், அதை கூட செய்யமுடியாது என்ற தமிழக அரசின் ஆணவபோக்கு மிகவும் கண்டனத்துக்கு உரியது.

தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், ஆளுநர் அவர்களை அருகில் வைத்து கொண்டு அமைச்சர் போல எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்பது போல செய்கிறார். இது தான் ஜனநாயகமா ? இப்படி தான் மக்கள் போற்றும் சட்டபேரவையை நடத்தப்பட வேண்டுமா ? தேசிய கீதத்தை புறக்கணித்து, மாண்புமிகு ஆளுநரை அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா...?. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+