தபால் வாக்கு: எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை.. திமுக வேட்பளார் பின்னடைவு!
சென்னை: எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3325 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டதால் எடப்பாடி தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது.
எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத் குமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3325 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
முதல் சுற்று முடிவில் எடப்பாடி பழனிசாமி 5484 வாக்குகளும், திமுக சம்பத்குமார் 2159 வாக்குகளும் பெற்றுள்ளனர். இன்னும் பல சுற்றுகளின் முடிவில் யார் வெற்றி பெறுவார் என்று தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications