18 எம்எல்ஏக்கள் வழக்கு.. அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை
சென்னையில் அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video

சென்னை: சென்னையில் அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த சுடர் தற்போது பற்றியெரிய தொடங்கி உள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஒரு தீர்ப்பு தமிழக அரசியலை புரட்டிப்போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு ஒருவேளை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வரும்பட்சத்தில் மொத்தமாக ஆட்சி மாற்றமே நடக்கும் என்று கூட கூறலாம்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டது. பெரும்பாலும் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் அதிமுக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ள நிலையில் ஆலோசனை நடக்கிறது. அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் தங்கியுள்ள நிலையில் ஆலோசனை நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக்கு பின் முதல்வர் பேட்டியளிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications