Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட் நியூஸ்.. 1 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1000! நாளை புதுமைப்பெண் 2.O-ஐ தொடங்கி வைக்கிறார் முக ஸ்டாலின்

புதுமைப் பெண் இரண்டாம் கட்ட திட்டத்தை சென்னையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் "புதுமைப் பெண்" இரண்டாம் கட்ட திட்டத்தை சென்னை பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்கட்டமாக தொடங்கி வைத்தார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் இந்த விழா நடைபெற்ற நிலையில், நாளை 2 ஆம் கட்ட புதுமை பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

புதுமைப் பெண் திட்டம்

புதுமைப் பெண் திட்டம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில், "பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது.

அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற நிகழ்ச்சி

அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற நிகழ்ச்சி

5.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பெண் கல்வியில் ஊக்கம்

பெண் கல்வியில் ஊக்கம்

இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர்கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

2 ஆம் கட்ட திட்டம்

2 ஆம் கட்ட திட்டம்

புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாளை (8.2.2023) திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம். இந்து கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில், மேலும் 1.04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழாவில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி. மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன், மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர், சமூக நலத்துறை இயக்குநர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+