தமிழ்நாட்டில் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல்.. மார்ச் 8 வெளியாகப்போகும் அறிவிப்பு.. பிஎல் சந்தோஷ் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 11ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறலாம் என்று பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 8 முதல் 12ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்றும் பிஎல் சந்தோஷ் பேசி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக தரப்பில் வாரத்திற்கு 2 மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக தரப்பில் பொதுக்கூட்டம், தேர்தல் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளை விரைவாக நடந்து வருகிறது. இதனிடையே நாளை மறுநாள் தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக தேர்தல்
இந்த இடைக்கால பட்ஜெட்டில் திமுக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவினர் பணிகளை தொடங்கி மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இறுதி வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. அதற்கேற்ப தேர்தல் ஆணைய நிர்வாகிகளும் தமிழ்நாட்டில் ஆலோசனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 மாநிலத் தேர்தல்
தமிழ்நாடு மட்டுமல்லாமல் அசாம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. 5 மாநிலத் தேர்தல் நடந்த பின், ஒரே நாளில் தேர்தல் முடிவுகளில் வெளியாகும் என்று தெரிகிறது. 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இப்படியான பாணியே பின்பற்றப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக முதலிலேயே தேர்தல் நடந்து முடிந்தது.
பிஎல் சந்தோஷ் பேசிய தகவல்
இருப்பினும் சுமார் ஒரு மாதத்திற்கு பின் முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பாஜகவின் மையக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் பங்கேற்றார். அப்போது பிஎல் சந்தோஷ் பேசுகையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 11ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறலாம் என்று பேசி இருக்கிறார்.
தேர்தல் அறிவிப்பு எப்போது?
சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 8 முதல் 12ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்று பிஎல் சந்தோஷ் பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் தாமதமாகும் என்று தெரிகிறது. இதன் காரணமாகவே தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 3 வாரங்கள் வரை பிடிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு










Click it and Unblock the Notifications