7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்!
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே வைகோவிடம் கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் மதிமுக தரப்பில் 7 தொகுதிகள் கேட்கப்பட்ட சூழலில், திமுக தரப்பில் 5 தொகுதிகள் மட்டும்தான் என்று கூறியதால், துரை வைகோ கடுமையான அதிருப்தியில் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தரப்பில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களுக்குள் அத்தனை கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீட்டை முடிக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதால், அறிவாலய சீனியர்கள் பரபரப்பாகி இருக்கின்றனர்.

இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தேர்தல் பணிகளை முடுக்கிவிட திமுக தயாராகிவிட்டது. இந்த நிலையில் மதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. 2021 சட்டசபைத் தேர்தலில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4ல் வென்றது. ஆனால் லோக்சபா தேர்தலில் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனால் சட்டசபைத் தேர்தலிலும் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதி மதிமுகவும், துரை வைகோவும் தீவிரமாக உள்ளனர். அதேபோல் மதிமுகவுக்கான மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்பதிலும் குறியாக உள்ளனர். இதற்கான திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் 12 தொகுதிகள் வேண்டும் என்று மதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியதோடு, தனிச்சின்னத்தில் போட்டி என்று கூறி இருக்கின்றனர்.
இதனால் திமுக சீனியர்கள் ஜெர்க்காகி இருக்கின்றனர். அப்போது எந்த உடன்பாடும் எட்டப்படாத சூழலில், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு நடத்தினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வைகோவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே வைகோவிடம் வேண்டுகோள் வைத்திருப்பதால், என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் மதிமுக முழித்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாநில அந்தஸ்துக்காக 7 தொகுதிகள் தேவை என்று மதிமுக கூறி இருக்கிறது. அதற்கு தொகுதி பங்கீட்டு குழு தரப்பில் 5 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று தெளிவாக கூறி இருக்கின்றனர்.
இதனால் துரை வைகோ கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். இப்படியான சூழலில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடரலாமா மற்றும் தொகுதி பங்கீடு குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவை பரிசு மழையில் நனைய வைத்த லீமா ரோஸ்! -
என் நிலைமைய பாத்தீங்களா? தைலாபுரம் பக்கம் தலை காட்டாத அடிபொடிகள்! புலம்பித் தவித்த அய்யா ராமதாஸ் -
எப்படி வெளியே போச்சு? ஆனந்திடம் கடுகடுத்த விஜய்! இரவோடு இரவாக முக்கிய மீட்டிங்! வெளியாகும் அறிவிப்பு -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின் -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ?












Click it and Unblock the Notifications