Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த சூழலில், இந்த முறை 4 தொகுதிகளாக குறைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கையில் கிடைத்த தகவல்களை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே முஸ்லீம் லீக், மமக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை திமுக வெற்றிகரமாக முடித்தது. அதுவும் காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக முடித்த பின், முதல்வர் ஸ்டாலின் உற்சாகமாகினார்.

TN Election Exclusive DMK Vaiko

இருப்பினும் மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்படவில்லை. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், தேர்தல் பணிகளில் திமுக ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டது. இதனால் ஒவ்வொரு நாளும் ஒரு கட்சியுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய பேச்சுவார்த்தைக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

அந்த வகையில் நேற்றிரவு மதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக சிறப்பாக முடித்துள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 6 மதிமுக வேட்பாளர்களில் 4 பேர் வென்றனர். ஆனால் இம்முறை மதிமுகவுக்கு 4 தொகுதிகளாக குறைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்த போது இந்த முறை மதிமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய திமுக முன் வந்தது.

ஆனால் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே வைகோவிடம் வேண்டுகோளாக வைத்திருக்கிறார். இதன் காரணமாகவே மதிமுக உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. ஆனால் துரை வைகோ நிச்சயமாக ஒரு தொகுதியிலாவது சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

இதன்பின் வைகோ தரப்பில் ஒரு தொகுதியில் சொந்த சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று கூறிய பின், திமுக தரப்பில் 4 தொகுதிகள் என்று குறைக்கப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் சிபிஐ, சிபிஎம், தேமுதிக மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+