பாஜகவுக்கு கிடைத்த திடீர் சந்தோஷம்.. கை தூக்கி விட்ட தபால் ஓட்டுக்கள்.. அதிமுக கூடுதல் பலம்!
பாஜகவுக்கு தபால் ஓட்டுக்கள் கை கொடுத்துள்ளன
சென்னை: பாஜக வெற்றி பெறக் கூடிய வாய்ப்புள்ள 4 தொகுதிகளிலும் அவர்களுக்கு தபால் ஓட்டுக்கள்தான் கை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த முறை அனைத்து கருத்து கணிப்புகளிலும் பாஜவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்றார்கள்.. 3 தொகுதிகளில் வேண்டுமானால் டஃப் தரலாமே தவிர, ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றார்கள்..
அதே போலத்தான் தற்போது 4 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. சில நேரம் இது 5 ஆக உயருகிறது. பிறகு குறைகிறது. மாறி மாறி டிரெண்டிங் வருகிறது.

எல்.முருகன்
நோட்டாவை தாண்ட மாட்டார்கள் என்று கால காலமாக சொல்லி வந்த நிலையில், எச்.ராஜா, எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் இருக்கின்றனர். அதேசமயம், கணிசமான வாக்குகள் முன்னிலையில்தான் இவர்கள் உள்ளனர். இவர்களுக்கு தபால் ஓட்டுக்கள்தான் கை கொடுத்துள்ளன.

காரணம்
இவர்கள் மட்டுமல்லாமல் பல தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் தபால் வாக்குகள்தான் வெற்றியை நிர்ணயிக்கும் நிலை உருவாகியுள்ளது... அதுதான் முக்கியக் காரணியாக இந்த தேர்தலிலும் அமையும் எனத் தெரிகிறது... பல தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வித்தியாசம்தான் என்றாலும், இதற்கு முக்கியக் காரணம் தபால் வாக்குகள்.

அதிருப்தி
பாஜக மீது மக்களுக்கு எவ்வளவோ அதிருப்திகள் உள்ளன.. நேரடியான கோபங்கள் உள்ளன.. பல விஷயங்களில் கண்டனங்களும், எதிர்ப்புகளும் உள்ளன.. இந்த காரணங்களுக்காகத்தான் அதிமுகவும் நிறைய வெறுப்பை சம்பாதித்தது.. இந்த தேர்தலைப் பொறுத்தவரை அதிமுகவின் முழுமையான பலத்தில்தான் பாஜக சில தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

முடிவு
கூடுதலாக தபால் வாக்குகள் கை கொடுத்துள்ளன. அதிமுகவுக்கே கூட பல தொகுதிகளில் தபால் வாக்குகள்தான் கை கொடுத்துள்ளன. தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரிய வரும்போதுதான் இந்த தேர்தலில் எத்தனை தொகுதிகளில் வெற்றி தோல்வியை தபால் வாக்குகள் முடிவு செய்துள்ளன என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications