மாலையில் மீட்டிங்.. காலையில் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த இபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி? என்னாச்சு
சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்கும் விழாவிற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை.
தமிழக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. 159 இடங்களில் திமுக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகவும், 33 திமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஏன்
இந்த பதவி ஏற்பு விழாவில் அதிமுக சார்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். சிரித்த முகத்தோடு பதவி ஏற்பு விழாவிற்கு ஓ. பன்னீர்செல்வம் வந்திருந்தார். திமுக தலைவர்களிடம் சகஜமாக பேசி, முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து, ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால்?
ஆனால் இந்த பதவி ஏற்பு விழாவிற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை. முன்னதாக தனது ராஜினாமா கடிதத்தை கூட இவர் ஆளுநரை சந்தித்து நேரில் அளிக்கவில்லை. மாறாக சேலத்தில் இருந்து கடிதம் மூலமாகவே எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தார்.

பதவி ஏற்பு
தற்போது பதவி ஏற்பு விழாவிற்கும் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை. எடப்பாடி பழனிசாமி வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விழாவை புறக்கணித்துள்ளார். இன்று மாலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. சென்னை அதிமுக அலுவலகத்தில் இந்த மீட்டிங் நடக்க உள்ளது.

கலந்து கொள்வார்
இந்த மீட்டிங்கில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள இருக்கிறார். இப்படி இருக்கும் போது காலையில் முதல்வர் ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவில் எடப்பாடி ஆப்சண்ட் ஆகி இருக்கிறார். இவர் ஏன் பதவி ஏற்பு விழாவிற்கு வரவில்லை, எதனால் விழாவை புறக்கணித்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை.. ஆனால் தேர்தல் தோல்விக்கு பின் எடப்பாடி பழனிசாமி வெளியே எங்கும் செல்லவில்லை, பொது இடங்களுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications