Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எது குறைவான நிதியா..? அதிமுக எம்.எல்.ஏ கேட்டதுமே பொங்கி எழுந்த பிடிஆர்.. லிஸ்ட் போட்டு விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு அரசின் எந்த துறைக்கும் கடந்த ஆண்டை விட குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அதிமுக எம்.எல்.ஏ ரவி, சில துறைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கியிருப்பதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு பதில் அளித்துப் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எந்தத் துறைக்கும் கடந்த ஆண்டை விட குறைவாக நிதி ஒதுக்கப்படவில்லை என விளக்கினார்.

சட்டமன்ற கூட்டத்தொடர்

சட்டமன்ற கூட்டத்தொடர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி 2023 -24ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதேபோல், 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்கியது. முன்னதாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நுறைவேற்றப்பட்டது.

 அதிமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

அதிமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இன்று பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ சு.ரவி, வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் அமைந்திருக்கிறது. வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை எனச் சொல்வதை விட மானிய கோரிக்கையின் போது வழங்கப்படும் கொள்கை விளக்க குறிப்பு புத்தகம் எனச் சொல்லலாம். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை வெளிப்படையாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது எனப் பேசினார்.

 நிர்வாக மாற்றம்

நிர்வாக மாற்றம்

அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "ஊரக வளர்ச்சித் துறையில் செயல்பட்டு வந்த ஜல் ஜீவன் மிஷன் நிர்வாக காரணங்களுக்காக மற்றொரு துறைக்கு மாற்றப்பட்டதால் 3 ஆயிரம் கோடி ரூபாய் இத்துறையில் இருந்து மற்றொரு துறைக்குச் சென்றது. அது நிர்வாக ரீதியான மாற்றம். அதன்படி பார்த்தால் 2023-24 நிதிநிலை அறிக்கையில் 9.4% கடந்தாண்டை விட அதிகமாகவே ஊரக வளர்ச்சித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

எந்த துறைக்கும்

எந்த துறைக்கும்


மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இந்த ஆண்டு முதல் மத்திய அரசே நேரடியாக வழங்குவதால் 893 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குறைவாக வந்திருக்கிறது. அந்தப் பணம் இதில் சேர்ந்திருந்தால் இந்த ஆண்டு 4,352 கோடியாக இருந்திருக்கும், இது சென்ற ஆண்டை விட ஆதிதிராவிடர் நலத்துறையில் 70 கோடி ரூபாய் கூடுதல். எனவே எந்தத் துறைக்கும் கடந்த ஆண்டை விட குறைவான தொகை ஒதுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+