மீண்டும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 தமிழக மீனவர்கள் கைது
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பாம்பனில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் உள்பட 14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால், மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவங்களும், அபராதம் விதிக்கப்படுவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதும், மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும்போதும், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
இந்நிலையில், பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காகச் சென்ற 10 மீனவர்கள் உள்பட 14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழக மீனவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக புத்தளம் கடற்படை முகாமிற்கு மீனவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications