27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு .. முழு விவரம்!
சென்னை: தமிழ்நாட்டில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீனதாவும், கடலூர் எஸ்.பியாக சக்தி கணேசும் நியமனம் செய்யப்ட்டுள்ளனர். செங்கல்பட் டு எஸ்.பி.யாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி.யாக செந்தில் குமார், தேனி எஸ்.பியாக டாங்ரே பிரவீன் உமேஷ், தென்காசி எஸ்.பியாக கிருஷ்ணராஜ் நியமிக்கப்ட்டுள்ளனர்.
திருச்சி எஸ்.பி.யாக மூர்த்தி, கரூர் எஸ்.பி.யாக சுந்தர வடிவேல், பெரம்பலூர் எஸ்.பி.யாக மணி, அரியலூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகரும், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனாவும், திருவண்ணாமலை எஸ்.பி.யாக பவன் குமார் ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன், தர்மபுரி எஸ்.பியாக கலைச்செல்வன், நாகை எஸ்.பியாக ஜவஹர், மயிலாடுதுறை எஸ்.பியாக சுகுனா சிங் நியமிக்கப்பட்டுளனர்.
நீலகிரி எஸ்.பியாக ஆஷிஷ் ராவத், ஈரோடு எஸ்.பியாக சசி மோகன், திருப்பூர் எஸ்.பியாக சஷாங்க் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி எஸ்.பியாக சாய் சரண் தேஜஸ்வி, புதுக்கோட்டை எஸ்.பி.யாக நிஷா பார்த்திபன், சேலம் எஸ்.பி.யாக சரோஜ் குமார் தாகூர்,, மதுரை எஸ்.பியாக பாஸ்கரன், விருதுநகர் எஸ்.பியாக மனோகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications