மாற்றத்தை சந்திக்க போகும் நகராட்சிகள்.. எண்ணிக்கை கூடப்போகுது.. குஷியில் முன்னாள் கவுன்சிலர்கள்!
சென்னை: மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் வார்டு வரையறை செய்வது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார். சேலம் வடக்கு தொகுதி திமுக உறுப்பினர் ரா.ராஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு இந்த பதில் அளித்தார் அமைச்சர் .
தமிழக சட்டப்பேரவையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய சேலம் வடக்கு தொகுதி திமுக உறுப்பினர் ரா.ராஜேந்திரன், "சேலம், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியானது. தற்போது 60 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில்,வார்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டும்" என்றார்.
அதற்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "சேலம் மாநகராட்சியில் வார்டு வரையறை முடிக்கப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. சேலம் மாநகராட்சியில் வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கைகள் வந்துள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சேலம் மாநகராட்சியில் 8 லட்சத்து 29,267 பேர் உள்ளனர். தற்போது 2021-ம் ஆண்டு கணக்கின்படி, 9 லட்சத்து 52 ஆயிரமாக மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

வார்டு வரையறை கோரிக்கை
சேலம் மாநகராட்சி மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளது. எனவே, மக்கள் தொகை பெருக்கம், வந்த கோரிக்கைகள் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் வார்டு மறுவரையறை செய்வது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது.

52 வார்டுகள்
இப்போது, மாநகராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் வார்டு எண்ணிக்கை அளவு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மக்கள் தொகை எண்ணிக்கை 3 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் 52 வார்டுகள் இருக்கலாம். 3 முதல் 4.5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் 58 வார்டுகள் இருக்கலாம்.

100 வார்டுகள்
4.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை - 63 வார்டுகளும் , 6 முதல் 8 லட்சம்வரை- 69 வார்டுகளும் , 8 முதல் 10 லட்சம் வரை - 75 வார்டுகளும், 10 முதல் 15 லட்சம் வரை - 88 வார்டுகளும் ,15 முதல் 20 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் - 100 வார்டுகளும் இருக்கலாம். 20 முதல் 30 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் 121 வார்டுகள் இருக்கலாம்.

200 வார்டுகள்
30 முதல் 40 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால்- 142 வார்டுகளும் , 40 முதல் 50 லட்சம் வரை இருந்தால் 161 வார்டுகளும், 50 முதல் 60 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் - 180 வார்டுகளும், 60 லட்சத்துக்கு மேல் 200 வார்டுகளும் இருக்கலாம் என்ற வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. வந்துள்ள கோரிக்கை அடிப்படையில் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications