கொட்டும் பணம்.. தமிழ்நாடு சார்பதிவாளர்களுக்கு செக் வைத்த அரசு! சொத்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆர்டர்
சென்னை: தமிழ்நாட்டில் பத்திர பதிவுத்துறையில் பணியாற்றி வரும் சார்பதிவாளர்கள் மாவட்ட பதிவாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் ஜூலை 25 ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பத்திரப்பதிவுக்கு ஆயிரம் தொடங்கி கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகளும் சார்பதிவாளர் அலுவலங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டன. சென்னையில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்கள். இந்த நிலையில்தான் பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் சொத்து அறிக்கை ஜூலை 27 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டு இருக்கும் உத்தரவில், “17.07.2023 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் W.P. Nos.2711 & 2719 of 2019 & 3177 of 2020 and W.M.P.No.3683 of 2020 Dated 17.07.2023 என்ற வழக்கில் பதிவுத்துறை தலைவர் ஆஜரான போது மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களின் சொத்து அறிக்கையைப் பெற்று சரிபார்க்க உத்தரவிட்டதற்கு இணங்க உரிய சுற்றறிக்கை 17.07.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.
அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி 7(3)ல் அரசு பணியாளர் ஒவ்வொருவரும் அவர்களுடைய சொத்து அறிக்கையினை ஒவ்வொரு 5 ஆண்டு கால இடைவெளியில் உரிய படிவத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உட்பிரிவு 7(3)(a)ல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
"தமக்கு முன்னோர் வழியாக கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள அசையாச் சொத்து"
சார்பதிவாளர். அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரும் தங்கள், குடும்ப உறுப்பினர்கள்(தாய், தந்தை, சகோதரர், சகோதரி, கணவர்/மனைவி, மகன், மகள் மற்றும் கணவர்/மனைவி-ன் தாய் தந்தை மற்றும் சகோதரர் சகோதரி) மற்றும் தொடர்புடைய நபர்கள் ஆகியோரது சொத்து அறிக்கையை ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண்(PAN) இணைத்து ஒரு வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர்கள் /துணைப் பதிவுத் துறை தலைவர்கள் / பதிவுத்துறை தலைவரிடம் 25.07.2023 க்குள் சமர்ப்பிக்க சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications