குஷியில் பள்ளி மாணவர்கள்.. இன்று முதல் 4 நாட்கள் லீவு.. அதைவிடுங்க.. சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸாமே
சென்னை: ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஆயுதபூஜை இந்த வருடம் வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமையாக வருகிறது.. அதேபோல, விஜயதசமி மறுநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், இந்தமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களுடன் சனி, ஞாயிறு என மொத்தமாக 4 நாட்கள் அரசு விடுமுறை வருகின்றன.. அதனால், சென்னையில் தங்கி வேலைபார்ப்பவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி: பலரும், ஊட்டி, கொடைக்கானல், போன்ற குளிர்பிரதேசங்களும், திருச்செந்தூர் வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, பழனி போன்ற ஆன்மீக தலங்களுக்கும் செல்ல ஆயத்தமாகிவருகிறார்கள். ஆனால், ரெயில்களில் டிக்கெட் புக்கிங் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டது. அரசு பஸ்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளிவிடும். அதனால்தான், நேற்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
தொடர் விடுமுறையையொட்டி தமிழக பள்ளிகளுக்கும் இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சமீபத்தில்தான் காலாண்டு தேர்வுக்கான விடுமுறை 5 முதல் 11 நாட்கள் வரை விடப்பட்டிருந்தது. அதனால், துர்கா பூஜைக்கான பண்டிகைக்கு, பெரும்பாலும் 3 முதல் 4 நாட்கள் தான் விடுமுறை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியபடியே இருந்தது.
விடுமுறை: இந்நிலையில், 4 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பண்டிகைகள் முடிந்தநிலையில், மறுபடியும் வரும், 25ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அதேநேரம், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதை தொடர்ந்து, 25 முதல், 27ம் தேதி வரை, 9, மற்றும் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படஉள்ளது.












Click it and Unblock the Notifications