முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவு..ஸ்டாலினைத் தொடர்ந்து ஆளுநர் நேரில் ஆறுதல்
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆறுதல் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார்.

இதனையடுத்து இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாயின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து மாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடியின் இல்லத்துக்கு நேரில் சென்றார்.
அங்கு முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் படத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆறுதல் கூறினார் பன்வாரிலால் புரோஹித்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications