அண்ணா பல்கலை. விவகாரம்.. யார் அந்த SIR? ஆளுநர் ரவி பக்கம் கேள்வியை திருப்பி வேல்முருகன் ஓரேபோடு
சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் யார் அந்த SIR என்ற கேள்விக்கு பல்கலைக் கழகங்களில் வேந்தராக இருக்கக் கூடிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிதான் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது: ரூபாய் ஒன்பது லட்சம் கோடிக்கு கடன் இருந்தாலும் பழைய திட்டங்கள் தொடரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது. ஒவ்வொரு சட்டசபை கூட்டத்தின் போதும் ஆளுநர் பங்கேற்க கூடிய விழாவிலும் ஆளுநர் ஒரு புதிய நடைமுறையை மரபை உண்டாக்க முயல்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு தமிழ்நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர் பதில் சொல்ல கடமைப்பட்டவர் . யார் அந்த SIR என்ற கேள்விக்கு பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுநர் ரவிதான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications