'புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள்..' துணை வேந்தர்கள் கூட்டத்தில் ஆளுநர் பேச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார். அதில் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் உள்ளதால் அதைப் பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த முன்வரவேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்கலைக்கழங்களின் நிலை மற்றும் மாநில அரசு நிதி உதவி குறித்து ஆளுநரிடம் துணை வேந்தர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் பல்கலைக்கழகங்களின் சாதனைகள் குறித்தும் ஆளுநரிடம் விளக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு 20 பல்கலைக்கழகங்களைக் கொண்டிருப்பதைப் பாராட்டினார். மேலும், Gross Enrolment Ratio எனப்படும் கல்லூரி மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளதையும் அவர் பாராட்டினார். உயர்கல்வியில் திறப்பாக உள்ளதாகக் கல்வித் திறன் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துமாறு துணைவேந்தர்களை ஆளுநர் வலியுறுத்தினார். துணைவேந்தர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆளுநர், இதற்காகத் திறமையான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் எனத் துணைவேந்தர்களிடம் வலியுறுத்தினார். பேராசிரியர்கள் நியமனத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் உள்ளதால் அதைப் பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த முன்வரவேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், ஆளுநர் அதற்கு நேர்மாறாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications