நீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு
Recommended Video
சென்னை: நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மத்திய அரசு விளக்காம் அளிக்காவிட்டால் மீண்டும் சிறப்பு கூட்டம் கூட்டி முடிவெடுக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் நீட் தேர்வு முடிவினை எதிர்க்க முதல்வர் பழனிச்சாமி தயாராவது உறுதியாகி உள்ளது.
நேற்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, நீட்விலக்கு மசோதாவை கடந்த 2017ம் ஆண்டே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டோம் என தெரிவித்திருந்தது.
இதனால் சட்டசபையில் இன்று கேளவிநேரம் முடிந்த பின்னர், நீட்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி அனுப்பபட்ட தீர்மானம் திருப்பி அனுப்பபட்ட விவகாரம் தொடர்பாக திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

மசோதா நிராகரிப்பு
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவை வித் ஹெல்ட் என குறிப்பிட்டால் நிராகரிப்பு என்று தான் அர்த்தம். நீட் விவகாரத்திலும் குடியரசுத் தலைவர் வித் ஹெல்ட் என்று தான் குறிப்பிட்டு அனுப்பி உள்ளார். எனவே மீண்டும் சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

பலமுறை கடிதம்
இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், "நீட் விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதே தவிர ரத்துசெய்யப்படவில்லை. நாங்கள் நீட் விலக்கு மசோதாவை நிறுத்தி வைத்ததற்கான காரணம் என்ன என்று கேட்டு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை.

எதையும் மறைக்கவில்லை
நீட் மசோதா நிரகாரிக்கப்பட்டதாக நேற்று நீதிமன்றத்தில்தான் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு இதுவரை அனுப்பிய எல்லா கடிதத்திலும் நீட் விலக்கு மசோதா குறித்து வித்ஹெல்ட் என்ற வார்த்தை தான் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரிஜெக்ட்என்ற வார்த்தை இடம்பெறவில்லை. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இமெயிலில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் அளிக்கும்போது தான் நிறுத்திவைத்து, நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். நீட் விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை. தேவைப்பட்டால் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்படும்" என்றார்.

மீண்டும் நீட் மசோதா
இதைத்தொடர்ந்து பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாணவர்களின் நலன் கருதி ஒருமித்த கருத்தோடு தீர்மானம் நிறைவேற்றினோம். நீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் மீண்டும் சிறப்பு கூட்டம் கூட்டப்படும். மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராவிட்டடால் சிறப்பு கூட்டம் கூட்டிமுடிவு எடுக்கப்படும் என்றார். இதன் மூலம் மத்திய அரசின் நீட் தேர்வு முடிவுக்கு எதிராக முதல்வர் பழனிச்சாமி மசோதா நிறைவேற்ற தயாராவது உறுதியாகி உள்ளது.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications