தமிழக அரசு அடித்த அடுத்த சிக்சர்.. 10000 கோடியில் ஏஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம்.. டிஆர்பி ராஜா பேட்டி
சென்னை: உலகமே AI நோக்கி சென்று கொண்டிருக்கிறது; AIயால் வேலை வாய்ப்புக்கு பாதிப்பு இல்லாமல், விழிப்புணர்வு வேண்டும். சர்வம் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது; ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் உயர் மதிப்பு ஊதியத்துடன் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சர்வம் நிறுவனம் மற்றும் தமிழக அரசு கூடிய விரைவில் ஒரு செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைப்பதற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது இந்த திட்டத்தின் குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் ஐஐடி பல்கலைக்கழகத்தின் இயக்குநர் காமகோடி மற்றும் சர்வம் செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர் ப்ரத்யூஸ் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தனர்

அமைச்சர் டி ஆர் பி ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஒவ்வொரு நாளும் தமிழகம் புதிய திட்டங்களை உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதித்து வருகிறது, உலகமே AI நோக்கி நகர்ந்து வருகிறது ,
மக்களிடையே ஏ ஐ மூலமாக எந்த விதமான பாதிப்புகள் பணிகளில் ஏற்படும் என்ற கவலை இருக்கும் முறையில் தற்போது வேலை வாய்ப்புகளுக்கு எந்த விதமான பதிப்புகள் இல்லாமல் தற்போது உள்ள வேலை வாய்ப்புகளை அடுத்த படிக்கு எடுத்து செல்லும் வகையில் விழிப்புணர்வு அளித்து வரும் வகையில் சர்வம் நிறுவனத்துடன் ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் துறை செயலாளர் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டுள்ளது . இதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1000 நபர்களுக்கு உயர் ஊதியம் வழங்கும் D TECH பணி வழங்கப்படும் , தமிழக மக்களுக்கு மிகவும் உதவி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படும்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் தேவைபடும் அதிலும் இந்தியாவில் முதல் மாநிலமாக இந்த ஏ ஐ மையத்தினை கொண்டு வர உள்ளது , தமிழில் முதல் முறையாக ஏ ஐ தொழில்நுட்பம் உருவாக உள்ளது. திராவிட மாடல் அரசு தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது , உற்பத்தி மற்றும் சேவையில் முதன்மையாக தமிழகம் உள்ளது.
தமிழகத்திற்கு ஒரு செயற்கை தொழில்நுட்ப தரவு மையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலமாக நம் மக்களின் தகவல் திருடப்படுவது தவிர்க்கப்படும் . மேலும் தமிழகத்திற்கு என தனிப்பட்ட ஒரு தனி மையம் இயக்கப்படும். இதன் மூலம் பல்வேறு வகையிலான வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும். GPU களுக்கான தட்டுபாடுகள் அதிகரித்து வருவதை உணர்த்து அதற்கான முன்னெடுப்பு பணிகளையும் மனதில் கொண்டுள்ளோம் , அதற்கு நல்ல முடிவு மிக விரைவில் எடுப்போம். அனைவரும் ஏ ஐ பயன்படுத்தி வருகிறோம் .
நம் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றது. இதனால் நம் வீட்டுக் குழந்தை முதலில் வளர்க்க முயற்சிப்போம். தமிழக warehouse policy போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த ஒரு திட்டம் வெளியிடப்படுகிறது அதனை தொடர்ந்து கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஒரு திட்டத்தினை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வெளியிட்டனர்"இவ்வாறு கூறினார்.
மெட்ராஸ் ஐஐடி பல்கலைக்கழகத்தின் இயக்குநர் காமகோடி அளித்த பேட்டியில், விவசாயம், மருத்துவம் மற்றும் பல்வேறு துறையில் AI தொழில்நுட்பத்தின் நல்ல தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் data centre கட்டப்படுவதற்கு ஒரு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது, ஒவ்வொரு துறையும், தனியார் நிறுவனமும் தங்களின் தரவுகளை ஒரே பகுதியில் இணைத்து கொள்ளும் வகையில் அமைக்கப்படும் ஒரு மையமாக உள்ளது, திட்டங்களை அனைத்து மக்களையும், நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு திட்டமாக இந்த திட்டம் இருக்கும்.
பல்வேறு துறைகளில் ஏ.ஐ பயன்படுகிறது.. அவற்றை எல்லாம் ஒருங்கிணைக்கும் வகையில் தகவல்களை சேகரித்து.
அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து தரவுகளும் இதில் சேரும், பல தரவுகளை சேர்த்து ஒரு கொள்கையை உருவாக்குகிறோம் இதற்கெல்லாம் இது பயனுள்ளதாக இருக்கும்" இவ்வாறு கூறினார்.
சர்வம் செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர் ப்ரத்யூஸ் பேசுகையில், உலகளவில் டிரில்லியன் டாலர் அளவில் ஏ.ஐ யில் முதலீடுகள் செல்கிறது. எந்த துறையானாலும் ஏ.ஐ தேவைப்படுகிறது இந்தியாவிலேயே நமக்கு தேவையான ஏ.ஐ உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications