சமஸ்கிருதத்திற்கு எஸ்.. ஆங்கிலத்திற்கு நோ.. யோகியை பின்பற்றி 3000 ஊர் பெயர்களை மாற்றும் அதிமுக!
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போலவே தமிழக அரசு தமிழகத்தில் 3000 பகுதிகளின் பெயர்களை மாற்ற போகிறது.
Recommended Video

சென்னை: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போலவே தமிழக அரசு தமிழகத்தில் 3000 பகுதிகளின் பெயர்களை மாற்ற போகிறது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் மற்றும் பைசாபாத் நகரங்களின் பெயர்களை மாற்றினார். அலகாபாத், பிரயாக்ராஜ் என்று மாறியது. பைசாபாத் அயோத்யா என்று மாற இருக்கிறது. இன்னும் சில நகரங்களின் பெயர்களை மாற்றும் யோசனையில் இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் சில நகரங்களின், ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளது.

எத்தனை பெயர்
மொத்தம் தமிழக அரசு தமிழகத்தில் 3000 பகுதிகளின் பெயர்களை மாற்ற போகிறது. இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் ஆலோசனை செய்து இந்த இடங்களின் பெயர்கள் மாற்றப்படும்.

எந்த இடங்கள் மாற்றப்படும்
அதன்படி டிரிப்பிளிகேன் பழையபடி திருவல்லிக்கேணி என்று மாற்றப்படும். திருச்சி, திருச்சிராப்பள்ளி என்று மாற்றப்படும். டூட்டிகோரின் தூத்துக்குடி என்று மாற்றப்படும். பூந்தமல்லி பூவிருந்தமல்லி என்று மாற்றப்படும். இதேபோல் பல முக்கியமான இடங்களின் பெயர்கள் பழைய பெயர்களே மாற்றப்பட உள்ளது.

ஆனால் என்ன
ஆனால் இதில் சமஸ்கிருத பெயர்கள் எதுவும் மாற்றப்படாது. ஆங்கில பெயர்கள் மட்டுமே மாற்றப்பட உள்ளது. மேலும் ஜாதி, மதம் ஊர் பெயர்களில் இருந்தால் அது மாற்றப்படாது. ஆங்கிலத்தை மட்டுமே மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

பெரும் விமர்சனம்
தமிழக அரசின் இந்த நடவடிக்கை விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. மாற்ற வேண்டும் என்றால் சமஸ்கிருத பெயர்களையும் மாற்ற வேண்டும். அதுவும் கூட வரலாறு படி உண்மையான தமிழ் பெயர் கிடையாது. அதை மட்டுமே ஏன் மாற்றாமல் இருக்கிறார்கள். தமிழக அரசு யோகி ஆதித்யநாத்தை பின்பற்றி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
-
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications