வீடு வாங்குனீங்களா.. வீட்டுவசதி வாரியத்தின் வட்டி தள்ளுபடி திட்டம்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் வீடு அல்லது மனை அல்லது குடியிருப்பு ஆகிய அலகுகளில், 31.3.2015-ந்தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்காக, வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு, மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வீட்டுவசதி வாரியத்தில் வீடு பெற்றவர்கள் நிலுவைத் தொகையை செலுத்ததாது தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். அந்த வகையில் நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு, வட்டி மற்றும் அபராதத் தொகையில் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

முழுத் தொகையையும் செலுத்திய பின்னரும் விற்பனைப் பத்திரம் பெறாதவர்களுக்கு, அதனை விரைந்து வழங்குவதற்காக சிறப்பு முகாம்களையும் அரசு அவ்வப்போது நடத்தி வருகிறது. அதேநேரம் நிலுவைத் தொகையை செலுத்தாதவர்களின் வீட்டு மனை ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதால், நிலுவைத் தொகையை செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வப்போது எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகிறது. எனினும் நிலுவை தொகை பிரச்சனையை கருணை அடிப்படையில் அணுகும் அரசு, வங்கியை போல் அபராதம் விதிக்காமல், அபராத வட்டியை தள்ளுபடி செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளது. அப்படி ஒரு அறிவிப்பினை தான் இப்போது அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் வீடு அல்லது மனை அல்லது குடியிருப்பு ஆகிய அலகுகளில், 31.3.2015-ந்தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்காக, வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு, மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.
மேலும் வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்தும்; நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும், விரைவாக விற்பனை பத்திரம் பெற வட்டித் தள்ளுபடி சலுகையை 31.3.2026 வரை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.
எனவே வட்டித் தள்ளுபடி திட்டத்திற்கு தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு, ஏற்கனவே நிலுவை தொகைக்கான தாக்கீது, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தகுதியான ஒதுக்கீடுதாரர்கள், இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி, தங்களது ஒதுக்கீட்டிற்கான நிலுவைத் தொகையை, ஒரே தவணையில் செலுத்தி, விற்பனைப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். 31.3.2026 தேதிக்குப் பின்னர், நிலுவைத் தொகையை செலுத்த முன்வரும் ஒதுக்கீடுதாரர்களுக்கு இவ்வட்டித் தள்ளுபடி திட்டம் பொருந்தாது" இந்தத் தகவலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வெளியிட்டு உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications