வேலை நிறுத்தம்- அரசு மருத்துவர்களுக்கு எதிராக பணிமுறிவு நடவடிக்கை- சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு எதிராக பணிமுறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊதிய உயர்வு, மேற்படிப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் 6 வார காலத்தில் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 6 வாரங்களை கடந்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று 6-வது நாளாக அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடருகிறது, இதனால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் போதிய மருத்துவர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் ஒட்டுமொத்தமாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து முழு அளவில் வேலை நிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணிக்கு வராத 15,000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் பணிக்கு வராத அரசு மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications