தமிழக உள்ளாட்சித் தேர்தல்: வார்டுகளை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகளின் போது ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி தெர்தலை தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்தது தமிழக அரசு. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் இறுதியில் வெளியாகலாம் என கூறப்பட்டது.
தேர்தல் நடத்தப்படாததால் சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலம் 5 முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
சட்டசபை இடைத் தேர்தல்கள், லோக்சபா தேர்தல்கள் முடிவுகளைப் போல உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு சவால்விடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை கணிசமான வாக்குகளை முடிவடைந்த தேர்தல்களில் பெற்றிருக்கின்றன.
தினகரனின் அமமுகவும் உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என கூறி வருகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலின் ஒரு கட்டமாக ஆண்களுக்கும் பெண்களுக்குமான வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கு 50% வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி சென்னையில் ஆண்களுக்கு 95, பெண்களுக்கு 105, திருச்சி மாநகராட்சியில் பெண்களுக்கு 33 வார்டுகள், சேலம் மாநகராட்சியில் பெண்களுக்கு 30 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வார்டுகள் புதியதாக வரையறை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications