ஆள்பற்றாகுறையில் பொதுப்பணித்துறை... புதிய ஏ.இ.க்களை நியமிக்க அரசு பரிசீலனை
சென்னை: பொதுப்பணித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களால் திட்ட அறிக்கை தயார் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் புதிய உதவி பொறியாளர், உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் ஆள் பற்றாகுறை பிரச்சனை தீர்க்கப்பட்டு பொதுப்பணித்துறையை முழு வீச்சில் செயல்பட வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

முக்கியத்துறை
தமிழக அமைச்சரவையில் உள்ள துறைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறை என்றால் அது பொதுப்பணித்துறை மட்டுமே. பவர்ஃபுல் துறையான இந்தத் துறை மக்களின் அடிப்படை தேவைகளையும், பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடிய பணிகளை செய்து வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தத் துறையை தாமே நிர்வகித்து வருகிறார்.

திட்ட அறிக்கை
இந்நிலையில் பொதுப்பணித்துறையில் நிரப்பப்படாத காலிபணியிடங்களால் திட்ட அறிக்கை தயாரிக்க கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறையை பொறுத்தவரை திட்ட அறிக்கை என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்த அறிக்கை தயார்செய்யப்பட்டு அரசிடம் சமர்பித்தால் தான், பணிகளுக்கு அரசு நிதியே ஒதுக்கீடு செய்யும்.

முக்கியப் பணி
தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வளப்பிரிவு, கட்டுமானம் ஆகிய பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கட்டுமானப்பணிகள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், மக்களோடு நேரடியாக தொடர்பு கொண்ட பணிகள் என்பதால் அரசு மற்ற துறைகளை விட இந்தத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.

புதிய பணியிடங்கள்
இதனிடையே, பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள உதவி பொறியாளர், அலுவலக உதவியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications