ஆள்பற்றாகுறையில் பொதுப்பணித்துறை... புதிய ஏ.இ.க்களை நியமிக்க அரசு பரிசீலனை
சென்னை: பொதுப்பணித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களால் திட்ட அறிக்கை தயார் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் புதிய உதவி பொறியாளர், உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் ஆள் பற்றாகுறை பிரச்சனை தீர்க்கப்பட்டு பொதுப்பணித்துறையை முழு வீச்சில் செயல்பட வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

முக்கியத்துறை
தமிழக அமைச்சரவையில் உள்ள துறைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறை என்றால் அது பொதுப்பணித்துறை மட்டுமே. பவர்ஃபுல் துறையான இந்தத் துறை மக்களின் அடிப்படை தேவைகளையும், பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடிய பணிகளை செய்து வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தத் துறையை தாமே நிர்வகித்து வருகிறார்.

திட்ட அறிக்கை
இந்நிலையில் பொதுப்பணித்துறையில் நிரப்பப்படாத காலிபணியிடங்களால் திட்ட அறிக்கை தயாரிக்க கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறையை பொறுத்தவரை திட்ட அறிக்கை என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்த அறிக்கை தயார்செய்யப்பட்டு அரசிடம் சமர்பித்தால் தான், பணிகளுக்கு அரசு நிதியே ஒதுக்கீடு செய்யும்.

முக்கியப் பணி
தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வளப்பிரிவு, கட்டுமானம் ஆகிய பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கட்டுமானப்பணிகள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், மக்களோடு நேரடியாக தொடர்பு கொண்ட பணிகள் என்பதால் அரசு மற்ற துறைகளை விட இந்தத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.

புதிய பணியிடங்கள்
இதனிடையே, பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள உதவி பொறியாளர், அலுவலக உதவியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications